Thursday 16 February, 2012

கவிதைப்போட்டி+ கவிதை நூல் வெளியீடு!



சகோதரி வான்மதி அவர்களை ஆசிரியராகக் கொண்டு பாவையர் மலர் எனும் மாதஇதழ் புதியன விரும்பு எனும் முழக்கத்தோடு வெளிவருகிறது. இதில் சிறுகதை, ஆன்மிகம், நேர்காணல், கவிதைகள்,துணுக்குச் செய்திகள், புத்தக விமர்சனம், வா.மு.கோமு, திலகபாமா ஆகியோர் எழுதும் தொடர்கள், பாவை பதில்கள், இன்னும் இன்னும் சுவராசியமான தகவல்களுடன் வெளிவருகிறது. மாதந்தோறும் கவிதை பரிசுப்போட்டியும் நடத்துகிறார்கள். மார்ச் மாதத்திற்கான தலைப்பு 'மாதவராய் பிறப்பதற்கே...!' இத்தலைப்பில் 16 வரிகளுக்குள் கவிதை எழுதி 25.02.2012க்குள் அனுப்பிவையுங்கள்.
இதழ் முகவரி-
பாவையர் மலர்,
55, வ.உ.சி.நகர், மார்க்கெட் தெரு,
தண்டையார் பேட்டை, சென்னை- 81
தொலைபேசி எண்- 044/2596 4747

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
மழலைச் சுவடுகள் (தொகுதி-4)
குழந்தைப் பாடல் புதிய தொகுப்பு வெளியிடவிருக்கிறார் கவிஞர் இரா. பன்னீர் செல்வம். அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த சிறுவர்களுக்கு விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் தூண்டும் வகையில் எளிய சந்த கவிதைகளை (12- 16 அடிகளில்) பாடலுக்கேற்ற படமுடன், 30.06.2012க்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். விருப்பமுள்ளவர்கள் பங்குத்தொகையாக 100.00 அனுப்பலாம். (கட்டாயமில்லையாம்.)
முகவரி- கவிஞர் பன்னீர் செல்வம்,
மலர் பதிப்பகம்,
5, ஆண்டியப்பன் தெரு, முதல் சந்து,
பழைய வண்ணாரப்பேட்டை,
சென்னை- 600 021
கைபேசி- 9884711802