Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts

Tuesday, 3 January 2012

ஒரு முக்கிய விடயம்

அன்புமிகு நண்பர்களுக்கு வணக்கம். ஒரு முக்கிய விடயத்தை உங்களுக்குத் தெரியப்படுத்தவே இந்த இடுகை.
பதிவர்களுக்காக பதிவர்களின் படைப்புகளை தாங்கி வெளிவந்த பதிவர் தென்றல் இதழ் போதிய விளம்பரம் கிடைக்காத காரணத்தால் நிறுத்தப்பட்டுவிட்டது என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்வத்துடன் சந்தா அனுப்பிய அனைவருக்கும் நன்றி. சந்தா தொகை விரைவில் திருப்பி அனுப்பி வைக்கப்படும். மீண்டும் சந்திப்போம். நன்றி.
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள். ரொம்ப தாமதமாக சொல்வதற்கு மன்னிக்கவும்.

Monday, 24 October 2011

அக்டோபர் மாத பதிவர் தென்றல் + தீபாவளி வாழ்த்துகள்!


கோவி.கண்ணன் http://govikannan.blogspot.com
கணேஷ் minnalvarigal.blogspot.com
மதுரை சொக்கன் http://shravanan.blogspot.com
ரியாஸ் http://riyasdreams.blogspot.com
வேலன்ஜி http://velang.blogspot.com
குரு. பழ.மாதேசு http://kavithaimathesu.blogspot.com
தங்கவேல்
http://thangavelmanickadevar.blogspot.com
பிளாக்கர் நண்பன் http://bloggernanban.blogspot.com
கணேசமூர்த்தி http://ganeshmoorthyj.blogspot.com/
கோகுல் http://gokulmanathil.blogspot.com
நெல்லைகவி எஸ்.ஏ. சரவணகுமார் http://nellaikavisasaravanakumar.blogspot.com
வத்திராயிருப்பு கவுதமன் http://watrapgauthaman.blogspot.com
சிவகாசிக்காரன் http://sivakaasikaaran.blogspot.com
ருக்மணி பாட்டி http://chuttikadhai.blogspot.com
ராஜபாட்டை ராஜா http://rajamelaiyur.blogspot.com
ஆர்.எஸ்.நாதன் rs-nathan.blogspot.com
யாழினி http://yazhinidhu.blogspot.com




www.latestgreetingcards.com

Friday, 30 September 2011

பதிவர் தென்றலுக்கு தமிழகமெங்கும் அமைப்பாளர்கள் நியமனம்...

திவர்களுக்காக- பதிவர்களின் படைப்புகளை மட்டுமே தாங்கி வரும் இதழான பதிவர் தென்றல் இதழைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். பதிவர் தென்றல் எங்கு கிடைக்கும் என்று ஆர்வமுடன் விசாரிக்கும் உங்களின் அன்புக்கு என்ன செய்வது என்று யோசித்தேன்.

தமிழகமெங்கும் இந்த இதழை கொண்டு சேர்க்கும் வகையில் பதிவர் தென்றலுக்கு மாவட்டத்திற்கு ஒரு அமைப்பாளர் என நியமனம் செய்யலாம் என்று தோன்றியது. அந்த அமைப்பாளருக்கு மாதம்தோறும் இதழ் அனுப்பி வைக்கப்படும். சந்தாவும் அவரிடமே செலுத்தலாம். அவர்களிடமிருந்து இதழை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இதழில் பதிவர்களின் படைப்புகளையே வெளியிடுவதுபோல் இதழுக்கான அமைப்பாளர்களையும் பதிவர்களே இருந்தால் நன்றாக இருக்குமென்பதும் என் யோசனை. பதிவர்களாக தமிழகமெங்கும் இருக்கும் நண்பர்கள் இந்த யோசனை பிடித்திருந்தால், உங்களுக்கு ஆர்வம் இருந்தால் எனக்கு தெரிவியுங்கள். இதழில் அமைப்பாளர்களின் பெயர்கள் அவர்களின் வலைத்தளத்தின் முகவரியோடு வெளியிடப்படும்.

டுத்த இதழ்- தீபாவளிக்கு முன்னதாக உங்களுக்கு கிடைக்கும் விதத்தில் தயாரிப்பில் இருக்கிறது. தீபாவளி பற்றி உங்களின் இடுகைகள் (சமையல், வெடி, பாதுகாப்பு, அனுபவம்...) வெளியாகியிருந்தால் அதன் லிங்கை எனக்கு தெரியப்படுத்தவும். பயன்படுத்திக் கொள்கிறேன்.

ஆகஸ்ட் மாத பதிவர் தென்றல் இதழில் இடம்பெற்ற பதிவர்கள்...

செப்டம்பர் மாத பதிவர் தென்றல் இதழில் இடம்பெற்ற பதிவர்கள்...

Monday, 22 August 2011

பதிவர் தென்றல் மாத இதழ் வெளிவந்துவிட்டது...

பதிவர் தென்றல் மாதஇதழ் வெளிவந்துவிட்டது...
பதிவர்களின் படைப்புகளை மட்டுமே தாங்கி வரும் பதிவர் தென்றல் முதல் இதழில் இடம்பெறும் படைப்பாளிகள்...
விதூஷ்
லெஷ்மி
வால்பையன்
கோமாளி செல்வா
செல்வராஜ் ஜெகதீசன்
கவிதைவீதி சௌந்தர்
சமுத்ரா
பூங்குழலி
இராஜராஜேஸ்வரி
ஈரோடு தங்கதுரை
அருள்
இவண் பிகில்
மோகன்குமார்
LIC சுந்தரமூர்த்தி
வடிவேலன்.ஆர்.
வாஞ்சூர்
சென்னை பித்தன்
அமுதாகிருஷ்ணன்
வின்சென்ட்

உங்கள் படைப்புகளும் இடம்பெற உங்களின் வலைத்தள முகவரியையும், உங்களின் முகவரியையும் எனக்கு மெயில் செய்யுவும்.
இதழுக்கு சந்தா கட்டி ஆதரவு தருக. சந்தா செலுத்துபவர்களுக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.சந்தா தொகையை அனுப்ப விவரங்கள் மெயிலில் தெரிவிக்கப்படும்.

Tuesday, 2 August 2011

பதிவர்களுக்காக-பதிவரால்...

ஆகஸ்ட் மாதம் முதல் பதிவர்களுக்காக-
பதிவர்களின் படைப்புகளை தாங்கி-
பதிவரால் (என்னால்) வெளியிடப்படுகிறது  பதிவர் தென்றல் மாத இதழ்.
புத்தகம்பெற விருப்பம் உள்ளவர்கள் தங்கள் முகவரியை அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் எனது மெயிலுக்கு அனுப்பி வையுங்கள்.
தனி இதழ் விலை - ஐந்து மட்டும்.
இரண்டு ஆண்டு கட்டணம் - 120.00 மட்டுமே.
விளம்பரம் செய்ய விரும்புவோரும் தொடர்பு கொள்ளலாம்.
தங்கள் இடுகைகளையும் இதழுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தால் வரும் இதழிகளில் பயன்படுத்திக் கொள்வேன். 
உங்கள் ஆதரவை அன்புடன் எதிர்நோக்குகிறேன்.  
நன்றி.

Tuesday, 5 July 2011

தேடல் மிகுந்த பதிவரா நீங்கள்?

வலைப்பதிவர்களும், வலை திரட்டிகளும் திங்கள் முதல் வெள்ளிவரை மிகவும் பரபரப்பாக இருப்பார்கள். சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மிகவும் மந்தமாக இருக்கும். தேடல் மிகுந்த பதிவர்கள் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களை தங்களின் தேடலுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
என்னதான் வலை திரட்டிகள் இருந்தாலும், புதிய புதிய பதிவர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்களை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல என்பதே உண்மை. புதிய பதிவர்களையும், நண்பர்களையும் கண்டுபிடிக்க எளிதாக ஒரு வழியிருக்கு. முயற்சித்து பாருங்களேன்.

உங்களின் வலைப்பக்கத்தை தொடக்கி, உங்களின் சுயகுறிப்பு (Profile) பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.


இதுபோல நீங்களும் உங்களுக்கு விருப்பமானவற்றை தங்களின் சுயகுறிப்பு பகுதியில் எழுதியிருப்பீர்கள். உங்களின் விருப்பத்தோடு ஒத்துப்போகும் நண்பர்களை கண்டறிய- உங்களின் விருப்பங்களான- உதாரணத்திற்கு கதை என்றால் அதன்மீது க்ளிக்கினால் உங்களைப்போன்றே கதையை விரும்பும் நபர்களின் பட்டியல் தோன்றும் அந்த வலைத்தளங்களுக்கு சென்று அவர்களை நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்.

அல்லது ஆகஸ்ட் மாதம் பதிவர்களின் படைப்புகளை தாங்கி, பதிவர்களுக்காகவே  வெளிவரவிருக்கும் பதிவர் தென்றல் 
மாதஇதழை படியுங்கள். பல புதிய பதிவர்களை கண்டுகொள்ளலாம்.
விவரங்களுக்கு முந்தைய இடுகையை படியுங்கள்... 

Sunday, 3 July 2011

காப்பி பேஸ்ட் செய்ய அனுமதி தேவை!



வலையுலக நண்பர்களே வணக்கம். 
உங்கள் இடுகைகளை காப்பி பேஸ்ட் செய்ய உங்கள் அனுமதி  வேண்டியே   இவ்விடுகை.

உண்மையாகத்தான்... உங்கள் வலைத் தளங்களில் உள்ள இடுகைகளில் நான் தேர்வு செய்திருக்கும் இடுகைகளை உபயோகப் படுத்திக்கொள்ள உங்கள் அனுமதி தேவை.  (அறிவிப்பு விரைவில் வரும்...)

உங்கள் படைப்புகளை தேர்ந்தெடுத்து வெளியிட இருக்கிறேன். அதற்காக உங்கள் ஒவ்வொருவரின் வலைத்தளத்திற்கும் வருகை புரிவேன். உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் கதை, கவிதை, கட்டுரைகள், நகைச்சுவை, சுற்றுலா கட்டுரைகள், 
ஆன்மிக செய்திகள், தாங்கள் வரைந்த ஓவியங்கள், சினிமா விமர்சனங்கள், சினிமா கிசுகிசுக்கள், இன்னும் சுவராசியமான செய்திகள் எதுவுமிருப்பினும் 
அத்தனையும் சுடப்பட்டு வெளியிடப்படும்.

நிச்சயமாக உங்கள் பெயர் மற்றும் வலைத்தள முகவரியும் இடம்பெறும். மேலும் விவரங்களுக்கு முந்தைய இடுகையை படிக்க தவறாதீர்கள்.

Sunday, 8 May 2011

சிறந்த பதிவர்கள் பட்டியலும், இன்ப அதிர்ச்சியும்...


வலைத்தளத்தில் எழுதுபவர்கள் பெருகிவிட்டனர். வலைத்தளத்தில் எழுதி வந்த பலர் இன்று பத்திரிகைகளில் எழுதவும் ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவுக்கு திறமைசாலிகள் பலர் உலகம் அறியாமல் குடத்திலிட்ட விளக்காய் இருந்திருக்கின்றனர்.

இருந்தாலும் பலர் இன்னமும் வெளிச்சத்துக்கு வராமல்- பரவலாக பலரின் பார்வைக்கு படாமல் வலைத்தளத்தில் எழுதிக் கொண்டிருக்கின்றனர் என்பதும் நிதர்சனமான உண்மை.

கதை, கவிதைகள், கட்டுரைகள், சினிமா விமர்சனங்கள், நகைச்சுவை, அரசியல்... இப்படி சிறப்பாக எழுதுபவர்களின் வலைத்தளத்திற்கு நீங்கள் சென்று படித்ததுண்டா? இவரின் வலைத்தளம் ஏன் பலரின் பார்வை படவில்லை என்று நீங்கள் நினைத்ததுண்டா?

அவர்களின் வலைத்தள முகவரியை இங்கே வரிசையிடுங்கள். ஒருவரே எத்தனை முகவரியை வேண்டுமானாலும் தரலாம். இதில் உங்கள் நண்பர் என்ற வகையில் அல்லாமல் திறமைசாலி என்ற அடிப்படையில் இருக்கட்டும். நீங்கள் தரும் அனைத்து வலைத்தள முகவரிக்கும் நான் சென்று பார்வையிடுவேன்.

சிறப்பான இடுகைகள் இட்டிருக்கும் பதிவர்களுக்கு ஜூலை மாதத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர்களுக்கு மட்டுமல்ல மற்ற பதிவர்களுக்கும் ஒரு இனிப்பான செய்தியும் காத்திருக்கிறது. அதற்கு நீங்கள் ஜூலை வரை காத்திருக்கத்தான் வேண்டும்.

ஆனால், வலைத்தள முகவரியை தர காத்திருக்க வேண்டாமே...
இந்த இடுகை சம்பந்தமாக கருத்துக்கணிப்பிலும் உங்களுள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

டிஸ்கி:  இந்த செய்தி அனைவரையும் சென்றடைய தமிழ்மணம், இண்ட்லியில் உங்கள் வாக்குகளை மறக்காமல் செலுத்திட அன்புடன் வேண்டுகிறேன்.