Tuesday 14 September, 2010

இப்படி யாருக்கும் நடந்ததுண்டா?


உங்களில் யாருக்கும் இப்படி நடந்ததுண்டா என்று தெரியவில்லை. நடந்திருந்தாலும் நடந்திருக்கலாம்.
என்ன நடந்தது? என்று அறிய ஆவலாக இருப்பீர்கள்.
தமிழிஸ் இன்டலியாக மாறினாலும் மாறிற்று புதிய இடுகையை அதில் வெளியிடுவதற்குள் போதும்போதுமென்று ஆகிவிடுகிறது.
இடுகையை புதுப்பிக்க உள் நுழைந்து எல்லாம் செய்தபிறகு, உங்கள் தளத்திலிருந்து புது இடுகை வெளியிட முப்பது நிமிடங்கள் காத்திருக்கவும் என்கிறது.
ஒரு இடுகைக்கும் அடுத்த இடுகைக்கும் இடைவெளி முப்பது நிமிடம் என்பது இன்டலியின் நிபந்தனை. அது எனக்கும் புரியும். ஆனால் எப்போதாவது இடுகையிடும் எனக்கும் அந்த மாதிரி முதல் இடுகையிடும்போதே வருகிறதே என்று புரியாமல் தவித்தேன்.
பிறகு, என் வலைத்தளத்தில் உள்ள இன்டலியின் பட்டையில் உள்ள like? என்பதை க்ளிக் செய்தேன். உடனே இன்டலியின் பக்கம் விரிந்தது. அதில் உள் நுழைந்ததும், அதுவாகவே அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்துகொண்டது. பிரிவுகள் என்ன என்பதை பூர்த்தி செய்துவிட்டு, இணைக்க என்பதை க்ளிக் செய்து எளிதாக இணைத்துவிட்டேன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.