Friday 30 September, 2011

பதிவர் தென்றலுக்கு தமிழகமெங்கும் அமைப்பாளர்கள் நியமனம்...

திவர்களுக்காக- பதிவர்களின் படைப்புகளை மட்டுமே தாங்கி வரும் இதழான பதிவர் தென்றல் இதழைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். பதிவர் தென்றல் எங்கு கிடைக்கும் என்று ஆர்வமுடன் விசாரிக்கும் உங்களின் அன்புக்கு என்ன செய்வது என்று யோசித்தேன்.

தமிழகமெங்கும் இந்த இதழை கொண்டு சேர்க்கும் வகையில் பதிவர் தென்றலுக்கு மாவட்டத்திற்கு ஒரு அமைப்பாளர் என நியமனம் செய்யலாம் என்று தோன்றியது. அந்த அமைப்பாளருக்கு மாதம்தோறும் இதழ் அனுப்பி வைக்கப்படும். சந்தாவும் அவரிடமே செலுத்தலாம். அவர்களிடமிருந்து இதழை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இதழில் பதிவர்களின் படைப்புகளையே வெளியிடுவதுபோல் இதழுக்கான அமைப்பாளர்களையும் பதிவர்களே இருந்தால் நன்றாக இருக்குமென்பதும் என் யோசனை. பதிவர்களாக தமிழகமெங்கும் இருக்கும் நண்பர்கள் இந்த யோசனை பிடித்திருந்தால், உங்களுக்கு ஆர்வம் இருந்தால் எனக்கு தெரிவியுங்கள். இதழில் அமைப்பாளர்களின் பெயர்கள் அவர்களின் வலைத்தளத்தின் முகவரியோடு வெளியிடப்படும்.

டுத்த இதழ்- தீபாவளிக்கு முன்னதாக உங்களுக்கு கிடைக்கும் விதத்தில் தயாரிப்பில் இருக்கிறது. தீபாவளி பற்றி உங்களின் இடுகைகள் (சமையல், வெடி, பாதுகாப்பு, அனுபவம்...) வெளியாகியிருந்தால் அதன் லிங்கை எனக்கு தெரியப்படுத்தவும். பயன்படுத்திக் கொள்கிறேன்.

ஆகஸ்ட் மாத பதிவர் தென்றல் இதழில் இடம்பெற்ற பதிவர்கள்...

செப்டம்பர் மாத பதிவர் தென்றல் இதழில் இடம்பெற்ற பதிவர்கள்...

5 comments:

இந்திரா said...

வாழ்த்துக்கள்.
கலக்குங்க..

குறையொன்றுமில்லை. said...

நல்ல விஷயம் நிரையபேரு கை கொடுக்கனும்.

Philosophy Prabhakaran said...

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...

சே.குமார் said...

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...

SURYAJEEVA said...

கலக்குங்க

Post a Comment

உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும். மேம்படுத்தும். தயவு செய்து முகம் சுளிக்கத்தக்க பின்னூட்டங்களை தவிருங்கள்.