Monday, 22 August 2011

பதிவர் தென்றல் மாத இதழ் வெளிவந்துவிட்டது...

பதிவர் தென்றல் மாதஇதழ் வெளிவந்துவிட்டது...
பதிவர்களின் படைப்புகளை மட்டுமே தாங்கி வரும் பதிவர் தென்றல் முதல் இதழில் இடம்பெறும் படைப்பாளிகள்...
விதூஷ்
லெஷ்மி
வால்பையன்
கோமாளி செல்வா
செல்வராஜ் ஜெகதீசன்
கவிதைவீதி சௌந்தர்
சமுத்ரா
பூங்குழலி
இராஜராஜேஸ்வரி
ஈரோடு தங்கதுரை
அருள்
இவண் பிகில்
மோகன்குமார்
LIC சுந்தரமூர்த்தி
வடிவேலன்.ஆர்.
வாஞ்சூர்
சென்னை பித்தன்
அமுதாகிருஷ்ணன்
வின்சென்ட்

உங்கள் படைப்புகளும் இடம்பெற உங்களின் வலைத்தள முகவரியையும், உங்களின் முகவரியையும் எனக்கு மெயில் செய்யுவும்.
இதழுக்கு சந்தா கட்டி ஆதரவு தருக. சந்தா செலுத்துபவர்களுக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.சந்தா தொகையை அனுப்ப விவரங்கள் மெயிலில் தெரிவிக்கப்படும்.

Tuesday, 2 August 2011

பதிவர்களுக்காக-பதிவரால்...

ஆகஸ்ட் மாதம் முதல் பதிவர்களுக்காக-
பதிவர்களின் படைப்புகளை தாங்கி-
பதிவரால் (என்னால்) வெளியிடப்படுகிறது  பதிவர் தென்றல் மாத இதழ்.
புத்தகம்பெற விருப்பம் உள்ளவர்கள் தங்கள் முகவரியை அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் எனது மெயிலுக்கு அனுப்பி வையுங்கள்.
தனி இதழ் விலை - ஐந்து மட்டும்.
இரண்டு ஆண்டு கட்டணம் - 120.00 மட்டுமே.
விளம்பரம் செய்ய விரும்புவோரும் தொடர்பு கொள்ளலாம்.
தங்கள் இடுகைகளையும் இதழுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தால் வரும் இதழிகளில் பயன்படுத்திக் கொள்வேன். 
உங்கள் ஆதரவை அன்புடன் எதிர்நோக்குகிறேன்.  
நன்றி.

Monday, 25 July 2011

கூகிள் பிளஸில் இணைந்து விட்டீர்களா?

கூகுள் பிளஸ் பற்றி அறிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் உள்ளது. இது பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அல்லது அனுபவம் பெற்றவர்கள் தங்கள் கூகுள் பிளஸில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன். கீழே இருக்கும் தொடுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென எண்ணுகிறேன்.
கூகிள் பிளஸில் இணைந்து விட்டீர்களா?

Tuesday, 5 July 2011

தேடல் மிகுந்த பதிவரா நீங்கள்?

வலைப்பதிவர்களும், வலை திரட்டிகளும் திங்கள் முதல் வெள்ளிவரை மிகவும் பரபரப்பாக இருப்பார்கள். சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மிகவும் மந்தமாக இருக்கும். தேடல் மிகுந்த பதிவர்கள் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களை தங்களின் தேடலுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
என்னதான் வலை திரட்டிகள் இருந்தாலும், புதிய புதிய பதிவர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்களை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல என்பதே உண்மை. புதிய பதிவர்களையும், நண்பர்களையும் கண்டுபிடிக்க எளிதாக ஒரு வழியிருக்கு. முயற்சித்து பாருங்களேன்.

உங்களின் வலைப்பக்கத்தை தொடக்கி, உங்களின் சுயகுறிப்பு (Profile) பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.


இதுபோல நீங்களும் உங்களுக்கு விருப்பமானவற்றை தங்களின் சுயகுறிப்பு பகுதியில் எழுதியிருப்பீர்கள். உங்களின் விருப்பத்தோடு ஒத்துப்போகும் நண்பர்களை கண்டறிய- உங்களின் விருப்பங்களான- உதாரணத்திற்கு கதை என்றால் அதன்மீது க்ளிக்கினால் உங்களைப்போன்றே கதையை விரும்பும் நபர்களின் பட்டியல் தோன்றும் அந்த வலைத்தளங்களுக்கு சென்று அவர்களை நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்.

அல்லது ஆகஸ்ட் மாதம் பதிவர்களின் படைப்புகளை தாங்கி, பதிவர்களுக்காகவே  வெளிவரவிருக்கும் பதிவர் தென்றல் 
மாதஇதழை படியுங்கள். பல புதிய பதிவர்களை கண்டுகொள்ளலாம்.
விவரங்களுக்கு முந்தைய இடுகையை படியுங்கள்... 

Sunday, 3 July 2011

காப்பி பேஸ்ட் செய்ய அனுமதி தேவை!



வலையுலக நண்பர்களே வணக்கம். 
உங்கள் இடுகைகளை காப்பி பேஸ்ட் செய்ய உங்கள் அனுமதி  வேண்டியே   இவ்விடுகை.

உண்மையாகத்தான்... உங்கள் வலைத் தளங்களில் உள்ள இடுகைகளில் நான் தேர்வு செய்திருக்கும் இடுகைகளை உபயோகப் படுத்திக்கொள்ள உங்கள் அனுமதி தேவை.  (அறிவிப்பு விரைவில் வரும்...)

உங்கள் படைப்புகளை தேர்ந்தெடுத்து வெளியிட இருக்கிறேன். அதற்காக உங்கள் ஒவ்வொருவரின் வலைத்தளத்திற்கும் வருகை புரிவேன். உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் கதை, கவிதை, கட்டுரைகள், நகைச்சுவை, சுற்றுலா கட்டுரைகள், 
ஆன்மிக செய்திகள், தாங்கள் வரைந்த ஓவியங்கள், சினிமா விமர்சனங்கள், சினிமா கிசுகிசுக்கள், இன்னும் சுவராசியமான செய்திகள் எதுவுமிருப்பினும் 
அத்தனையும் சுடப்பட்டு வெளியிடப்படும்.

நிச்சயமாக உங்கள் பெயர் மற்றும் வலைத்தள முகவரியும் இடம்பெறும். மேலும் விவரங்களுக்கு முந்தைய இடுகையை படிக்க தவறாதீர்கள்.

Sunday, 8 May 2011

சிறந்த பதிவர்கள் பட்டியலும், இன்ப அதிர்ச்சியும்...


வலைத்தளத்தில் எழுதுபவர்கள் பெருகிவிட்டனர். வலைத்தளத்தில் எழுதி வந்த பலர் இன்று பத்திரிகைகளில் எழுதவும் ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவுக்கு திறமைசாலிகள் பலர் உலகம் அறியாமல் குடத்திலிட்ட விளக்காய் இருந்திருக்கின்றனர்.

இருந்தாலும் பலர் இன்னமும் வெளிச்சத்துக்கு வராமல்- பரவலாக பலரின் பார்வைக்கு படாமல் வலைத்தளத்தில் எழுதிக் கொண்டிருக்கின்றனர் என்பதும் நிதர்சனமான உண்மை.

கதை, கவிதைகள், கட்டுரைகள், சினிமா விமர்சனங்கள், நகைச்சுவை, அரசியல்... இப்படி சிறப்பாக எழுதுபவர்களின் வலைத்தளத்திற்கு நீங்கள் சென்று படித்ததுண்டா? இவரின் வலைத்தளம் ஏன் பலரின் பார்வை படவில்லை என்று நீங்கள் நினைத்ததுண்டா?

அவர்களின் வலைத்தள முகவரியை இங்கே வரிசையிடுங்கள். ஒருவரே எத்தனை முகவரியை வேண்டுமானாலும் தரலாம். இதில் உங்கள் நண்பர் என்ற வகையில் அல்லாமல் திறமைசாலி என்ற அடிப்படையில் இருக்கட்டும். நீங்கள் தரும் அனைத்து வலைத்தள முகவரிக்கும் நான் சென்று பார்வையிடுவேன்.

சிறப்பான இடுகைகள் இட்டிருக்கும் பதிவர்களுக்கு ஜூலை மாதத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர்களுக்கு மட்டுமல்ல மற்ற பதிவர்களுக்கும் ஒரு இனிப்பான செய்தியும் காத்திருக்கிறது. அதற்கு நீங்கள் ஜூலை வரை காத்திருக்கத்தான் வேண்டும்.

ஆனால், வலைத்தள முகவரியை தர காத்திருக்க வேண்டாமே...
இந்த இடுகை சம்பந்தமாக கருத்துக்கணிப்பிலும் உங்களுள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

டிஸ்கி:  இந்த செய்தி அனைவரையும் சென்றடைய தமிழ்மணம், இண்ட்லியில் உங்கள் வாக்குகளை மறக்காமல் செலுத்திட அன்புடன் வேண்டுகிறேன்.

Tuesday, 14 September 2010

இப்படி யாருக்கும் நடந்ததுண்டா?


உங்களில் யாருக்கும் இப்படி நடந்ததுண்டா என்று தெரியவில்லை. நடந்திருந்தாலும் நடந்திருக்கலாம்.
என்ன நடந்தது? என்று அறிய ஆவலாக இருப்பீர்கள்.
தமிழிஸ் இன்டலியாக மாறினாலும் மாறிற்று புதிய இடுகையை அதில் வெளியிடுவதற்குள் போதும்போதுமென்று ஆகிவிடுகிறது.
இடுகையை புதுப்பிக்க உள் நுழைந்து எல்லாம் செய்தபிறகு, உங்கள் தளத்திலிருந்து புது இடுகை வெளியிட முப்பது நிமிடங்கள் காத்திருக்கவும் என்கிறது.
ஒரு இடுகைக்கும் அடுத்த இடுகைக்கும் இடைவெளி முப்பது நிமிடம் என்பது இன்டலியின் நிபந்தனை. அது எனக்கும் புரியும். ஆனால் எப்போதாவது இடுகையிடும் எனக்கும் அந்த மாதிரி முதல் இடுகையிடும்போதே வருகிறதே என்று புரியாமல் தவித்தேன்.
பிறகு, என் வலைத்தளத்தில் உள்ள இன்டலியின் பட்டையில் உள்ள like? என்பதை க்ளிக் செய்தேன். உடனே இன்டலியின் பக்கம் விரிந்தது. அதில் உள் நுழைந்ததும், அதுவாகவே அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்துகொண்டது. பிரிவுகள் என்ன என்பதை பூர்த்தி செய்துவிட்டு, இணைக்க என்பதை க்ளிக் செய்து எளிதாக இணைத்துவிட்டேன்.