Thursday, 16 February 2012

கவிதைப்போட்டி+ கவிதை நூல் வெளியீடு!



சகோதரி வான்மதி அவர்களை ஆசிரியராகக் கொண்டு பாவையர் மலர் எனும் மாதஇதழ் புதியன விரும்பு எனும் முழக்கத்தோடு வெளிவருகிறது. இதில் சிறுகதை, ஆன்மிகம், நேர்காணல், கவிதைகள்,துணுக்குச் செய்திகள், புத்தக விமர்சனம், வா.மு.கோமு, திலகபாமா ஆகியோர் எழுதும் தொடர்கள், பாவை பதில்கள், இன்னும் இன்னும் சுவராசியமான தகவல்களுடன் வெளிவருகிறது. மாதந்தோறும் கவிதை பரிசுப்போட்டியும் நடத்துகிறார்கள். மார்ச் மாதத்திற்கான தலைப்பு 'மாதவராய் பிறப்பதற்கே...!' இத்தலைப்பில் 16 வரிகளுக்குள் கவிதை எழுதி 25.02.2012க்குள் அனுப்பிவையுங்கள்.
இதழ் முகவரி-
பாவையர் மலர்,
55, வ.உ.சி.நகர், மார்க்கெட் தெரு,
தண்டையார் பேட்டை, சென்னை- 81
தொலைபேசி எண்- 044/2596 4747

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
மழலைச் சுவடுகள் (தொகுதி-4)
குழந்தைப் பாடல் புதிய தொகுப்பு வெளியிடவிருக்கிறார் கவிஞர் இரா. பன்னீர் செல்வம். அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த சிறுவர்களுக்கு விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் தூண்டும் வகையில் எளிய சந்த கவிதைகளை (12- 16 அடிகளில்) பாடலுக்கேற்ற படமுடன், 30.06.2012க்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். விருப்பமுள்ளவர்கள் பங்குத்தொகையாக 100.00 அனுப்பலாம். (கட்டாயமில்லையாம்.)
முகவரி- கவிஞர் பன்னீர் செல்வம்,
மலர் பதிப்பகம்,
5, ஆண்டியப்பன் தெரு, முதல் சந்து,
பழைய வண்ணாரப்பேட்டை,
சென்னை- 600 021
கைபேசி- 9884711802

Tuesday, 3 January 2012

ஒரு முக்கிய விடயம்

அன்புமிகு நண்பர்களுக்கு வணக்கம். ஒரு முக்கிய விடயத்தை உங்களுக்குத் தெரியப்படுத்தவே இந்த இடுகை.
பதிவர்களுக்காக பதிவர்களின் படைப்புகளை தாங்கி வெளிவந்த பதிவர் தென்றல் இதழ் போதிய விளம்பரம் கிடைக்காத காரணத்தால் நிறுத்தப்பட்டுவிட்டது என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்வத்துடன் சந்தா அனுப்பிய அனைவருக்கும் நன்றி. சந்தா தொகை விரைவில் திருப்பி அனுப்பி வைக்கப்படும். மீண்டும் சந்திப்போம். நன்றி.
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள். ரொம்ப தாமதமாக சொல்வதற்கு மன்னிக்கவும்.

Monday, 24 October 2011

அக்டோபர் மாத பதிவர் தென்றல் + தீபாவளி வாழ்த்துகள்!


கோவி.கண்ணன் http://govikannan.blogspot.com
கணேஷ் minnalvarigal.blogspot.com
மதுரை சொக்கன் http://shravanan.blogspot.com
ரியாஸ் http://riyasdreams.blogspot.com
வேலன்ஜி http://velang.blogspot.com
குரு. பழ.மாதேசு http://kavithaimathesu.blogspot.com
தங்கவேல்
http://thangavelmanickadevar.blogspot.com
பிளாக்கர் நண்பன் http://bloggernanban.blogspot.com
கணேசமூர்த்தி http://ganeshmoorthyj.blogspot.com/
கோகுல் http://gokulmanathil.blogspot.com
நெல்லைகவி எஸ்.ஏ. சரவணகுமார் http://nellaikavisasaravanakumar.blogspot.com
வத்திராயிருப்பு கவுதமன் http://watrapgauthaman.blogspot.com
சிவகாசிக்காரன் http://sivakaasikaaran.blogspot.com
ருக்மணி பாட்டி http://chuttikadhai.blogspot.com
ராஜபாட்டை ராஜா http://rajamelaiyur.blogspot.com
ஆர்.எஸ்.நாதன் rs-nathan.blogspot.com
யாழினி http://yazhinidhu.blogspot.com




www.latestgreetingcards.com

Monday, 10 October 2011

துயில்' நாவல் குறித்த கலந்துரையாடல்

எஸ். ராமகிருஷ்ணனின் "துயில்' நாவல் குறித்த கலந்துரையாடலுக்கான (8.10.2011 மாலை நேர) நிகழ்ச்சி ஏற்பாடுகளை டிஸ்கவரி புக் பேலஸின் உரிமையாளர் திரு.வேடியப்பன் செய்திருந்தார். முனைவர் இராம. குருநாதன் அவர்கள் தலைமையில் மற்றும் கூத்துப்பட்டறைச் சேர்ந்த தம்பிச்சோழன் சிறப்புரையாற்றுகிறார் என்ற தகவல் கிடைத்தது.

கொஞ்சம் தாமதமாகத்தான் சென்றேன். நான் சென்றபோது தம்பிச்சோழன் நாவல் பற்றி பேசிக்கொண்டிருந்தார். முடியும் தருவாயில் சென்றேன். கூட்டம் அதிகமாகயிருந்ததால் வசதியாக நிற்பதற்கு இடம்தேடுவதற்குள் அவர் பேசிமுடித்திருந்தார். அடுத்து எஸ்.ரா பேசினார். அவர் பேசியதன் முழு விவரத்திற்கு இங்கே சொடுக்கவும். http://www.tv.udanz.com

ரசித்த துளிகளில் என் ஞாபகத்தில் இருந்தவை மட்டும் இங்கே....

துயில் நாவலில் வரும் தெக்கூடு எனும் ஊர் உண்மையில் இல்லவே இல்லையாம். முழுக்க முழுக்க எஸ்.ரா.வின் கற்பனையாம். இதை அவர் குறிப்பிடும்போது அனைவரும் ஆச்சரியமாய் ரசித்தனர்.

துயில்- என்றால் தூக்கம். மனிதனுக்கு தூக்கம் ரொம்ப முக்கியம். அது சரியில்லாததால்தான் பெரும்பாலான குறைபாடுகள் வருகிறது (அதை குறைபாடுகள் என்றுதான் சொல்ல வேண்டும். நோய் என்று கூறக்கூடாது) என்றார். கிராமத்து பிள்ளைகள் எல்லாம் நன்றாக ஓடியாடி விளையாண்டு நன்றாக தூங்கும். ஆனால் நகரத்துப் பிள்ளைகளை பெற்றோர்கள் தூங்கு தூங்கு என்று சொல்- அவர்களே டயர்டாகி தூங்கிவிடுவார்கள். பெற்றோர்கள் தூங்கிவிட்ட பிறகு இதற்கு முழித்திருந்து என்ன செய்யப்போகிறோம் என்று நினைத்து பின்பு குழந்தைகளும் தூங்கிவிடும் என்றார்.

ரு மருத்துவமனைக்கு சென்றிருந்தாராம். அந்த மருத்துவ மனையில் வயதான ஒருவருக்கு மருத்துவர் நன்கு விசாரித்துவிட்டு குறிப்பேட்டில் எழுதிவிட்டு சென்றாராம். அவர் சென்றபிறகு எஸ்.ராவிடம் அந்த பெரியவர், "என் மகன்தான் டாக்டர். நல்லா கவனிச்சுக்கிறான். ஆனால் என்னை கையைப் பிடித்து விசாரிக்க மாட்டேங்கிறான்'' என்றவாரு எஸ்.ராவின் கையை பிடித்துக் கொண்டாராம். வயதானவர்கள் வசதி வாய்ப்புகளைவிட தங்களை வாஞ்சையுடன் கவனிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் கையை கொஞ்ச நேரம் பிடித்திருந்தாலே அவர்கள் ரொம்பவும் மகிழ்வார்கள் என்றார்.
விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இந்நாளில் உலகமே சுருங்கிவிட்டது. ஆனாலும் மருத்துவத்துறையில் மட்டும் தேக்கமடைந்திருப்பதாக வருத்தப்பட்டார். சென்னையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் ஒருவர் வேலை விசயமாக மதுரைக்கு செல்ல நேர்ந்திருக்கும்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால், அங்கிருக்கும் மருத்தவமனையிலும் (சென்னையில் எடுத்ததுபோலவே) அனைத்து டெஸ்ட்டுகளும் எடுக்க சொல்வார்கள். நெட்வொர்க் மூலம் அனைத்து மருத்துவமனைகளும் ஒருங்கிணைக்கப் பட்டிருந்தால் இந்த செலவுகள் மிச்சம்தானே என்றார். அவர்களின் சம்பாத்தியம் போய்விடும் என்பதால் இதை யாரும் செய்வதில்லை என்று வருத்தப்பட்டார்.

முன்பெல்லாம் மருத்துவரின் வீடும் மருத்துவம் செய்யுமிடமும் ஒன்றாக இருந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் கதவைத் தட்டி சிகிச்சை செய்துகொள்ள முடியும். அந்த காலத்தில் மருத்துவம் என்பது சேவையாக இருந்தது. ஆனால் இப்பொழுது அதை தொழிலாக்கி விட்டதால் மருத்துவமனை என்று தனியே கட்டிவிட்டார்கள். எங்கள் குடும்பமே மருத்துவ குடும்பம்தான். என் சகோதரன் வேட்டி சட்டையில்தான் எப்பொழுதும் இருப்பார். அவர் டாக்டர்தானா என்றுகூட பலரும் சந்தேகிப்பார்கள். மருந்து சீட்டையும் தமிழில்தான் எழுதுவார் என்று கூறினார். ஆச்சரியமும் அதிர்ச்சியும்தான் வந்திருந்தவர்களின் முகத்தில் தெரிந்தது.

சித்தமருத்துவர்கள்கூட தங்களின் தொழில் ரகசியங்களை வெளியில் சொல்வதில்லை. அவர்களின் குழந்தைகளுக்குத்தான் சொல்லிக் கொடுப்பார்கள். அந்தக் குழந்தைகளுக்கு அத்துறையில் ஈடுபாடு இல்லையென்றால் அந்த ரகசியங்கள் அவரோடு அழிந்து போய்விடும். இப்படித்தான் பல ரகசியங்கள் அழிந்துபோய்விட்டதாக வருத்தம் தெரிவித்தார்.

துயில் நாவலில் சில இடங்களில் எழுத்துப்பிழைகள் இருப்பதாக சொன்னபோது-
இருக்கலாம். ஏனெனில் எழுதிய நானே படித்தால் எழுத்துப்பிழைகள் தெரியாது. வெளிநாடுகளில் பிழைதிருத்த என அனைத்து துறைபற்றியும் தெரிந்தவர்கள் இருப்பார்கள். கண்டெட்-டை (உள்ளடக்கம்) திருத்த ஒருவர். பாராகிராப் (பத்தியமைப்பு) பார்ப்பதற்கு ஒருவர் என்றிருப்பார்கள். பின்பு பதிப்பகத்தார் படித்து, மாதிரி காப்பி ரெடி செய்து எழுத்தாளருக்கு அனுப்புவார்கள். எழுத்தாளர் பார்த்துவிட்டு சரி என்றதும்தான் அச்சுக்கு அனுப்புவார்கள் என்றார். ஆனால் தமிழ்நாட்டில் அனைத்து துறை அறிந்த பிழைதிருத்துநர்கள் இல்லை. அதற்கான தேவை இருக்கிறது என்றார்.

Friday, 30 September 2011

பதிவர் தென்றலுக்கு தமிழகமெங்கும் அமைப்பாளர்கள் நியமனம்...

திவர்களுக்காக- பதிவர்களின் படைப்புகளை மட்டுமே தாங்கி வரும் இதழான பதிவர் தென்றல் இதழைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். பதிவர் தென்றல் எங்கு கிடைக்கும் என்று ஆர்வமுடன் விசாரிக்கும் உங்களின் அன்புக்கு என்ன செய்வது என்று யோசித்தேன்.

தமிழகமெங்கும் இந்த இதழை கொண்டு சேர்க்கும் வகையில் பதிவர் தென்றலுக்கு மாவட்டத்திற்கு ஒரு அமைப்பாளர் என நியமனம் செய்யலாம் என்று தோன்றியது. அந்த அமைப்பாளருக்கு மாதம்தோறும் இதழ் அனுப்பி வைக்கப்படும். சந்தாவும் அவரிடமே செலுத்தலாம். அவர்களிடமிருந்து இதழை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இதழில் பதிவர்களின் படைப்புகளையே வெளியிடுவதுபோல் இதழுக்கான அமைப்பாளர்களையும் பதிவர்களே இருந்தால் நன்றாக இருக்குமென்பதும் என் யோசனை. பதிவர்களாக தமிழகமெங்கும் இருக்கும் நண்பர்கள் இந்த யோசனை பிடித்திருந்தால், உங்களுக்கு ஆர்வம் இருந்தால் எனக்கு தெரிவியுங்கள். இதழில் அமைப்பாளர்களின் பெயர்கள் அவர்களின் வலைத்தளத்தின் முகவரியோடு வெளியிடப்படும்.

டுத்த இதழ்- தீபாவளிக்கு முன்னதாக உங்களுக்கு கிடைக்கும் விதத்தில் தயாரிப்பில் இருக்கிறது. தீபாவளி பற்றி உங்களின் இடுகைகள் (சமையல், வெடி, பாதுகாப்பு, அனுபவம்...) வெளியாகியிருந்தால் அதன் லிங்கை எனக்கு தெரியப்படுத்தவும். பயன்படுத்திக் கொள்கிறேன்.

ஆகஸ்ட் மாத பதிவர் தென்றல் இதழில் இடம்பெற்ற பதிவர்கள்...

செப்டம்பர் மாத பதிவர் தென்றல் இதழில் இடம்பெற்ற பதிவர்கள்...

Monday, 26 September 2011

செப்டம்பர் மாத பதிவர் தென்றல் இதழில் இடம்பெற்ற பதிவர்கள்...


அடுத்த பதிவர் தென்றல் மாதஇதழ் வெளிவந்துவிட்டது...
பதிவர்களின் படைப்புகளை மட்டுமே தாங்கி வரும் பதிவர் தென்றல் செப்டம்பர் இதழில் இடம்பெறும் படைப்பாளிகள்...

ஈரோடு கதிர்

கமலா

சிமுலேசன்

சைபர்சிம்மன்

ராஜூ

சசிகுமார்

கேபிள்சங்கர்

சுரேகா

புதுகை தென்றல்

தமிழ்உதயம்

சொல்கேளான் ஏ.வி.கிரி

சண்முகவேல்

என். கணேசன்

இந்திரா

யாழினி


குடந்தை அன்புமணி


உங்கள் படைப்புகளும் இடம்பெற உங்களின் வலைத்தள முகவரியையும், உங்களின் முகவரியையும் எனக்கு மெயில் செய்யுவும்.
இதழுக்கு சந்தா கட்டி ஆதரவு தருக. சந்தா செலுத்துபவர்களுக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

Thursday, 15 September 2011

பதிவர் சந்திப்பு

செப்டம்பர் 4ந்தேதி யூத் பதிவர் சந்திப்பு என்றதும் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும் (இல்லேன்னா நான் யூத் இல்லைன்னு நினைச்சிடுவாங்களோன்னு) உடனே முடிவெடுத்தேன். அருமை தங்கமணிக்கிட்ட அனுமதி வாங்கிட்டு (ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் லீவு. அன்னைக்கும் வீட்டுல உள்ளவங்களோட இல்லேன்னா எப்படி? என்று முணுமுணுத்தவளை தாஜா செய்துவிட்டு) கிளம்பினேன்.
கவுண்டமணி பேன்ஸ் வலைத்தளத்தில் இருந்த விஐபி. நம்பருக்கு போன் செய்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இறக்குமிடம் பற்றி விசாரிப்பு... (அடிக்கடி பதிவர் சந்திப்பு டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தாலும் நான் கலந்து கொள்வது இது முதல்முறை அதான் முகவரி விசாரிப்பு... காரணம்... அதான் மேலே விரிவா எழுதியிருக்கேனே...)
ஐந்தரை மணியிருக்கும்போது கே. கே. நகரில் இருந்தேன். சற்று நேர தடுமாற்றத்திற்கு பிறகு பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை கண்ணில் பட்டது. அருகி-ருந்த டீக்கடையில் நின்றவர்கள் எல்லாரும் பதிவர்களாகவே தெரிந்தார்கள். எல்லாம் பிரமை...
உத்தேசமாக சாலையில் நடந்தேன்... சில அடிதூரம் நடந்த பின்பு கண்டேன்... டிஸ்கவரி புக் பேலஸை. வாசலில் தண்ணீர் பாட்டில்களுடன் (நிச்சயமாங்க அது தண்ணீர் பாட்டில்தான்) இரண்டுபேர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களிடம் என்னை அறிமுகம் செய்ய... அவர்கள் சிவகுமார் என்றும் கருண் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர்களுடன் மாடிக்கு சென்றேன். மாடியில் பிலாசபி பிரபாகரன், தம்பி கூர்மதி, அஞ்சா சிங்கம், நா. மணிவண்ணன் மற்றும் இன்னும் சிலர் பெயர் ஞாபகத்தில் இல்லை. அவர்களனைவருக்கும் பதிவர் தென்றலை அறிமுகப்படுத்தினேன். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. (பொங்கியது?)
நிகழ்ச்சி நடக்கும் அறைக்குள் சென்றோம். அங்கு ஏற்கெனவே அமர்ந்திருந்த சென்னைப்பித்தன், தமிழ் சிபியூ ராஜ்குமாரை (இருவரையும்தான் பார்த்ததும் அடையாளம் தெரிந்தது. மற்றவர்கள் எல்லாம் தங்களின் பழைய படங்களைத்தான் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். உஷாராக இருங்கள்)
ஒருவரை பார்த்து நீங்கள் யார்? என்று கேட்டேன். சரியாப்போச்சு என்றார். பக்கத்தி-ருப்பவர் அவர்தான் ஷர்புதீன் என்றார். (யூத் பதிவர் சந்திப்பு என்றதும் மீசையெல்லாம் எடுத்துவிட்டு வந்திருந்தார்.) கவிதைவீதி சௌந்தர் பதிவர் தென்றல் நல்லாருக்கு என்றார். கருண் உங்களை எங்கேயோ பார்த்தமாதிரியிருக்கே? என்றார். எங்கே படிச்சீங்க, எந்த கல்லூரி என்று விசாரித்தார். கடைசிவரை எங்கு பார்த்தார் என்று அவருக்கு தெரியவில்லை. எனக்கும் ஞாபகத்தில் இல்லை.
சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். கேபிள் சங்கர் உள்ளே வந்ததும் ஆட்டம் ஆரம்பித்தது. வந்திருந்தவர்களை எல்லாரையும் திரும்பி பார்த்தேன். எனக்கு தெரிந்த தலைகள் என்று பார்த்தால்... கேபிள் சங்கர், லக்கி, ஜாக்கி சேகர்... மற்றவர்கள் அனைவரும் புதிய முகமாகவே தெரிந்தார்கள்.
டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வந்து பார்த்துவிட்டு சென்றார். அவருக்கும் பதிவர் தென்றல் கொடுத்தேன். பார்த்துவிட்டு நல்லாருக்கே... நம்ம கடை விளம்பரமும் போட்டுடலாம்... போகும்போது என்னைப் பாருங்க... என்றார். (அய்... ஒரே கல்-லே ரெண்டு மாங்கா... பதிவர் சந்திப்பு + விளம்பரம்)
பதிவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தேறியது. இந்த பதிவர் சந்திப்பில் சில வாசகர்களும் கலந்துகொண்டார்கள். அவர்களை கேபிளார் அய்... வாசகர்... என்று கலாய்த்துக்கொண்டிருந்தார். அந்த வாசகர் வலைத்தளம் தொடங்க ஆர்வம் வந்துவிட்டதாக சொல்ல... வடை போச்சே... என்றார்.
மாஸ் (நிஜமாலுமே அவர்தான் யூத்... கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்) என்பவர் ஜாக்கியின் வலைத்தளம்தான் முதலில் படித்தது, ஜாக்கிதான் எனக்கு முதல் பின்னூட்டம் இட்டது... என்று வார்த்தைக்கு வார்த்தை ஜாக்கி புராணம் பாடினார். இதுக்கு எவ்வளவு செலவாச்சு என்று கேபிளார் கலாய்த்தார்.
ஒவ்வொருவரின் அறிமுகத்துக்கு பிறகு, பதிவர்களுக்கு டிப்ஸ் வழங்க வந்தார் லக்கி. பதிவுகளின் நீளத்தை குறைத்து சுருக்கமாக (யாருக்காக.... இது யாருக்காக....) இடுகையிடவும், தலைப்பை வசீகரமாக வைக்கும்படியும் வற்புறுத்தினார். தலைப்பு வைப்பதில் எழுத்தாளர் சுஜாதாவை பின்பற்றும்படி கூறினார். இடுகையிட எதுவும் தோன்றவில்லை என்று சொல்வதை ஏற்பதற்கில்லை என்றார். செய்தித்தாளை படிங்க அதி-ருந்து உங்களுக்கு தோன்றுவதை எழுதுங்க என்றார். (ஆனா, செய்தித்தாளை காப்பி அடிக்காதீங்க இது நமதுகுரல்)
பின்பு உருப்படாதது நரேன் பேசினார். எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுங்க. எதிர்கருத்தை பற்றி கவலைப்படாமல் எழுதுங்க என்றார். பின்னூட்டத்திற்கு பயந்து பலர் எழுதாமல் இருந்துவிடுவதாக கூறினார்.
வாசகர் ஒருவர் கருத்தான இடுகைகள் இடும் பதிவர்கள் மொக்கைகளையும் இடுகிறார்கள். இதை தவிர்க்கலாம் என்றார். (மொக்கையை தவிர்த்தால் பல பதிவர்கள் காணாமல் போய்விடுவார்களே...)
கேபிளார் அவரின் அனுபவத்தை கூறி கேட்டால் கிடைக்கும் இயக்கம் ஆரம்பித்திருப்பது பற்றி தெரிவித்தார். இது பற்றி பின்பு சுரேகாவும் பகிர்ந்துகொண்டார்.
ஜாக்கியும், சாமிதுரை இன்னும் பலர் தனது அனுபவங்களை பகிர்ந்தனர்.
இந்த பதிவர் சந்திப்பு பற்றி எனது ஞாபகத்தில் உள்ளவற்றை இங்கே பகிர்ந்திருக்கிறேன். மற்றவை நம்ம பிலாசபி பிராபாகரன் வலைத்தளத்தில் வரும் திங்கள் அல்லது செவ்வாய் எதிர்பார்க்கலாம்- போட்டோ வும்தான்! வேறு யாரும் போட்டோ எடுத்திருந்தா எனது மெயிலுக்கு விரைந்து அனுப்பி வையுங்க... பதிவர் தென்ற-ல் வெளியிடலாம்.